மதுரையில் தி.மு.க. பொதுகுழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்! நாளையும், மறுநாளும் 6. தொகுதி மக்களையும் சந்திக்கின்றார்!
- உறியடி செய்திகள்
- 3 days ago
- 3 min read

மதுரையில் தி.மு.க. பொதுக்கு முவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.! 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களையும் தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது..!
தி.மு.கழகத்தின் தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மே 31ம் தேதி மதுரை செல்கிகிறார். நாளை ஜூன் 1ம் தேதி உத்தங்குடியில் நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக, இரு நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும் முதல் அமைச்சர் 6. சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களையும் நேரில் சந்திக்கவும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும்
த் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.!
முதல்வர், மே 31ந் தேதி விமானம் மூலம் மதுரை வரும் முதல் அமைச்சர் வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம், ஜீவா நகர், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ். பாலம், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் சிக்னல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக சாலை மார்க்கமாக செல்ல கின்றார்.!

இதனை தொடர்ந்து மதுரை முன்னாள் மேயர் முத்து திருவுருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.. , நிகழ்ச்சியை முடித்து கொண்டு புறப்படும் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் வாசலில், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நிரந்தர மெகா பந்தலையும், டி.வி.எஸ். நகர் பாலம், ஜெய்ஹிந்த்புரம் பிரிவும் திறந்து வைக்கின்றார்.
. பின்னர் இரவு, முதல் அமைச்சர் அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார்.!

மறுநாள் (ஜூன் 1) காலை மீண்டும் சாலை மார்க்கமாக, மாட்டுத்தாவணி ஆர்ச்சிலிருந்து தொடங்கி, உத்தங்குடி வரை பொதுமக்களை நேரில் சந்தித்தபடி செல்கின்றார் . இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும், மதுரை தெற்கு, மத்திய, மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது..!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சியினர் இப்போது இருந்தே தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக தரப்பில் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.!
அதேபோல் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள், முக்கிய பிரமுகர்கள் என்று 10 ஆயிரம் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக பொதுக்குழு பிரம்மாண்டமாக நடத்த அமைச்சர் மூர்த்தி கைகளில் திமுக தலைமை பொறுப்பை வழங்கி இருக்கிறது. இதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மேடையில் மட்டும் 100 பேர் அமரும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக 100 அடி கம்பத்தில் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுக்குழு கூட்டப் பணிகளை சுமார் 80 சதவிகிதம் வரை முடித்துவிட்டார் அமைச்சர் மூர்த்தி. அதேபோல் பொதுக்குழு கூட்டத்திற்கு முதல் நாள் இரவே நிர்வாகிகள் பலரும் வரத் தொடங்கிவிடுவார்கள்.!

சாலை வழியாக வரும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் மே 31ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியது முதலே நகர்ப் பகுதிகள் வழியாக சுமார் 20 கிமீ ரோடு ஷோ நடத்த அமைச்சர் மூர்த்தி திட்டமிட்டிருக்கிறார். 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளதால், இதனை யாரும் மறக்க கூடாத வகையில் ஏற்பாடுகளுக்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கின்றது.
இந்த பொதுக்குழு மூலமாக திமுக தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியிருப்பதாக அரசியல் பார்வையார்களும், விமர்சகள் தரப்பிலும் கூறப்படுகின்றது.!
ஏற்பாடுகளை அமைச்சர்கள் - மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் செய்து வருகின்றார்கள்.!
முதல்வர் ஸ்டாலின் நாளை (மே 31) மதுரைக்கு வருகை தரவுள்ளார். அவரது சாலைப் பேரணி மற்றும் சிலை திறப்பு விழா காரணமாக, போக்குவரத்து காவல்துறை சில சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. !
காலை 6 மணி முதல் வாகன இயக்கத் தடை:
சாலைப் பேரணி வழித்தடம்: அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலையிலிருந்து ஜெயவிலாஸ் சந்திப்பு வரை நடைபெறும் சாலைப் பேரணியின்போது, குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.!

தடைசெய்யப்பட்ட பகுதிகள்: பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் ஆர்ச், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜெய்ஹிந்துபுரம், சந்தர்ராஜபுரம், மாடக்குளம், பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, காளவாசல், திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.!
நகருக்குள் நுழைய தடை: பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.!
மாற்றுப் பாதைகள்:
விமான நிலையம் செல்பவர்கள்: தெற்குவாசல் - சிந்தாமணி ரிங் ரோடு வழியாகச் செல்லலாம்.
திருப்பரங்குன்றம் செல்பவர்கள்: அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாகச் செல்லலாம்.
மதியம் 1 மணி முதல் கனரக வாகனங்களுக்குத் தடை:
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: C2 சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் முதல் காளவாசல் சந்திப்பு வரை நடைபெறும் நிகழ்ச்சி காரணமாக கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.!
தடைசெய்யப்பட்ட வழித்தடம்: திருநகர், திருப்பரங்குன்றம் வழியாகச் செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை:
கூத்தியார்குண்டு பாலம் – நாகமலை புதுக்கோட்டை – சமயநல்லூர் ரிங் ரோடு வழியாகச் செல்லலாம்.!
குரு தியேட்டர் – புதுஜெயில் சாலை மாற்றங்கள்:
சமயநல்லூர், பாத்திமா கல்லூரி, தத்தனேரி, அம்மா பாலம் வழியாக: இந்த வழித்தடங்களில் வாகனங்கள் இயக்கப்படும்.
வாடிப்பட்டி, தேனி, கம்பம் செல்லும் பேருந்துகள்: பாத்திமா கல்லூரி வழியாகச் செல்லலாம்.
மேல் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள்: நாகமலை ரிங் ரோடு – துவரிமான் – சமயநல்லூர் – தத்தனேரி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.!
விழா முடிந்த பிறகு போக்குவரத்து மாற்றங்கள்:
புதுஜெயில் சாலை வழியாக நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள்: டி.பி.கே. ரோடு – கீழவாசல் – காமராசர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வாகனங்கள்: இதே பாதையையே பின்பற்ற வேண்டும்.
என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.!
Comments