top of page
Search

பொள்ளாச்சி பெண்கள் வழக்கு! எடப்பாடி மீது கடும் தாக்கு! 2026 - ல் தி.மு.க. மக்கள் ஆட்சி உறுதி! கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி!

  • May 15
  • 2 min read

மணவை.எம்.எஸ்.ராஜா@ ச.ராஜா மரிய திரவியம்.

தோகமலை.......



பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அப்போதய அதிமுக அரசு நிற்கவில்லை.எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாதநிலையில் தான் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் உருவானது கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி.!


திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மத்திய மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் - ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி கருணாநிதி எம்.பி. கொண்டு, 2026 - சட்டப்பேரவை தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனை கூறி பேசினார்.! தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, “வரும் 2026 -சட்டப் பேரவை தேர்தல் களநிலவரம் குறித்து அறிந்து தேர்தல்கள நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில், கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.!

2026 தேர்தலை முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் கழகம் எதிர்கொள்வதற்க்கான வியூகங்கள் வகுப்பதற்கு, அரசியல் கள நிலவரம் குறித்து ஆலோசனைகளை பெற்று தேர்தலை எதிர்கொள்ள அனைவரது கருத்துக்களும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.!


அந்த வகையில், கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் தளபதியாரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில்

மாவட்ட அளவில் களத்தில் பணிகளை திறம்பட செய்யக்கூடிய நிர்வாகிகளான உங்களது கருத்துகளை கேட்டு தேர்தல்கள் பணிகளை, செய்வதற்க்கும், அதற்கான வியூகங்கள் வகுப்பதற்கும், இதனை தொடர்ந்து கள தேர்தல் பணிகளை தொடர்ந்திடவும் உங்கள் ,அனைவரின் தேர்தல் பணிகள் குறித்த மேலான ஆலோசனைகள் மிகவும் உதவும் வகையில் இருக்கும்.!

கழகத்தில், குறிப்பாக நமக்குள் பல்வேறு விருப்பு வெறுப்புகளை கடந்து காழ்ப்புணர்ச்சி இல்லாமல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முத்தமிழறிஞர் தலைவர் விட்டுச் சென்ற வழியில் மக்களாக்கான கழக ஆட்சியை மீண்டும் 2026 , தேர்தலிலும் வெற்றி தொடரச்செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.!


எனவே 2026 , சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையில் எதிர்கொண்டு, கழக ஆட்சியை மீண்டும் அமைத்திட உங்கள் அனைவருடைய கருத்துகளையும் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் தெளிவாக எடுத்துரைத்தால் தேர்தல் களத்தை நாம் எதிர்கொண்டு சந்திப்பது மிக எளிதாக இருக்கும்.!


தேர்தல் நெருங்குவதால் தி.மு.கழக அரசின், தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை திட்டங்களை மக்களிடத்தில், பல்வேறு பிரச்சாரங்கள் - திண்ணைப் பிரச்சாரம் மூலமாக வீடு, வீடாக எடுத்து சென்று மக்களிடத்தில் நாம் அனைவரும், கழகத்தின் வெற்றி ஒன்றே லட்சியம் என்கிற உறுதியோடு தேர்தல் பணிகளை முன் எடுத்து செல்லவேண்டும்” இவ்வாறு, கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி, "பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அன்றைய அதிமுக அரசு நிற்கவில்லை.! இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் முறையாக உரிய முறையில் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் அப்போது ஏற்பட்டது.!


மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் நிலை ஏற்படாத காரணத்தினாலேயே மக்கள் போராட்டம் நடத்தி வழக்கு சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டது. பொள்ளாச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றியது பெருமை என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது வெட்கப்பட வேண்டிய விஷயம்.! வரும் சட்டப் பேரவை தேர்தலில் இதற்கு தக்க பாடத்தை மக்கள் அளிப்பார்கள்.!


2026 -சட்டப் பேரவை தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க முகம் மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்" இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page