தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.!
‘இந்தியா’ கூட்டணி தி.மு.கழக வேட்பாளர், கவிஞர் கனிமொழி கருணாநிதி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
அப்போது பொதுமக்களிடத்தில்,பிரச்சாரத்தில் தி.மு.கழக துணைச்செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:–
பா.ஜ.க. தொடர்ந்து மக்களுக்கு இடையே ஜாதி மதம் பிரச்சினைகள் உருவாக்கி மக்கள் அனைவரும் சகோதரத்துடன் இணைந்து ஒற்றுமையாக வாழக் கூடாத சூழலை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்,!
அதே போல தொழிலாளர் மாணவர்களுக்கு எதிரான நீட் உள்ளிட்ட சட்டங்கள், CAA உள்ளிட்ட சட்டங்கள் கொண்டு வந்தார்கள்,!
அந்த சட்டங்களை பா.ஜக.வின் கைப்பாவையாக மக்களை பற்றி கவலைப்படாமல் , தங்களின் சுயநலத்துக்காக ஆதரித்தது அ.தி.மு.க. இப்படி இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மாநில வாரியாக வாழும் மக்களுக்கு இரண்டு கட்சிகளும் சேர்ந்து தொடர்ந்து துரோகங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.!
மோடியின் ஆட்சியில் தான் சீனா வடக்கில் அருணாச்சலப் பிரதேசத்தில் பல கிராமங்களில், சீனர்கள் ஆக்கிரமித்து தனி கிராமங்களை உருவாக்கி வீடு கட்டி 30 இடங்களுக்கு மேல் சீன மொழியில் பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க பிரதமருக்கு தைரியமோ! துணிவோ! இல்லை. இந்த நாட்டினுடைய எல்லையைப் பாதுகாக்க வேண்டும், மக்களைப் பாதுகாக்க வேண்டும், நமது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் அதை நிச்சயமாக பா.ஜ.க. ஆட்சியாலும், அவர்களும் இயலாமையாலும் உறுதியாக இனி செய்ய முடியாது. !
எனவே தான் இந்த தேர்தல் பா.ஜ.க. வைப் பதவியிலிருந்து இறக்கக் கூடிய தேர்தலாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.!
மணிப்பூரில் பிரச்சி னையை தங்களின் அரசியல் லாபத்திற்காக உருவாக்கி விட்டு கலவரங்களை ஏற்படுத்தி, அதை இன,மத, கலவரங்களாக கொளுந்து விட்டு இவர்கள் செய்த காரணத்தால், இன்று மக்கள் யாரும் அங்கு வீடுகளில் இல்லை, எல்லாரும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்றாவது வீட்டுக்கு போக முடியுமா முடியாத என்ற நிலைமையில் இருக்கிறார்கள்.!
ஆனால் மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி ஒரு முறை கூட சென்று அந்த மக்களை பார்த்ததில்லை,!
ஆனால்உலகம் முழுவதும் சுற்றுகிறார். அவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.!
உங்களில் ஒருவராக, இந்த தொகுதி மக்களின் தேவைகள். நல்லது, கெட்டது அறிந்து, நம்முடைய கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அண்ணன் தளபதியார் நேரடி கவனத்து கொண்டு சென்று, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது கருப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் காட்டும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. உங்களோடு, உங்களுள் ஒருவராக, தொடர்ந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.!
இவ்வாறு கவிஞர் கனிமொழி கருணாநிதி பேசினார்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு. கழகச் செயலாளர், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் - சார்பு அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.