தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை, தங்கத் தமிழ்ச்செல்வன் அறிக்கை!
தேனிவடக்கு மாவட்டச் செயலாளர், இண்டியா கூட்டணி தி.மு.கழக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.!
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், உலக நாடுகளுக்கும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில்திராவிட மாடல் ஆட்சி நாயகர், தளபதி மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக் கூட்டம், பல்வேறு கட்ட பரப்புரை, நேரிடையாகமக்களோடு மக்களாகவும் வாக்குகள் சேகரித்து வருகின்றார்.!
இந்நிலையில் தேனியில், தேனி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.!
தமிழ்நாட்டுமக்களை ஏமாளியாக நினைத்துக் கொண்டு வெறும் வாயாலே வடை சுடுபவர்கள் வலம் வருகிற இந்த தேர்தல் காலகட்டத்தில் ---.!
தேனி நாடாளுமன்ற ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளு மன்ற ‘இந்தியா’ கூட்டணி யின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்த்தை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கும் மக்களிடத்தில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை நினைபடுத்தியும் - இண்டியா கூட்டணியின் . எதிர்கால மக்கள் நல திட்ட வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்குகள் சேகரித்து பரப்பரைகளை தொடரவுள்ளார்.!
முன்னதாக நாளை (10.04.2024) புதன்கிழமை, லட்சுமிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அருகில் அமைந்துள்ள, கலைஞர் திடலில் மாலை 4.00 மணிக்கு மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற உள்ளார்.
எனவே இந்த மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் . தி.மு.கழகத்தினர்கள், கூட்டணி கட்சியினர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.!
எனவே வரலாற்று முக்கியத்துவசிறப்பு மிக்க இந் நிகழ்ச்சியில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு,
பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வாக்காளர்கள் என பெரும் திரளானோர் அலைகடல் என திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.!
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியுள்ளார்