top of page
  • Writer's pictureஉறியடி செய்திகள்

மோடி- அமித்ஷா, சசிகலா என்றாலே பழனிச்சாமிக்கு பயம்! கனிமொழி கருணாநிதி பேச்சு!

மோடி- அமித்ஷா, சசிகலா என்றாலே பழனிச்சாமிக்கு பயம்! கனிமொழி கருணாநிதி பேச்சு!


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மிகுந்த சுடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் இடையே போட்டா போட்டியும் நிலவி வருகிறது.


பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ்நாட்டை நோக்கிவந்த வண்ணம் உள்ளார், இது கடந்த காலங்களை ஒப்பிடும்போது மிகவும் அரிதான ஒன்றாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றது.!


இந்நிலையில்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்றிரவு கொளத்துாரில் நடந்த பிரச்சாரபரப்புரை பொதுக்கூட்டத்தில் தி.மு.கழக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது;


நடைபெறுகின்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல். ஆனால், இது ஒரு சட்டமன்ற தேர்தல் என்பது போல், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தி.மு.கழகத்தின் மீது அவதூர றுகளையும், ஆதர மற்றகுற்றங்களையும் கூறி வருகிறார்.!

. அவரது புகார்களுக்கு நாங்கள் உரிய பதிலளித்தும் வருகிறோம். அவர், கொளத்துார் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்கிறார்.


அவர் இந்த தொகுதிக்கு முதல்வரான பின் 3 ஆண்டுகளில் 52 முறை வந்துள்ளார். அவர் எவ்வளவு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என்பது இந்த தொகுதி மக்களுக்கு தெரியும். இதுவரை எடப்பாடி பழனிசாமி மோடியை பற்றி ஏதாவது ஒருவார்த்தை பேசி ஓட்டு கேட்டுள்ளாரா? அவருக்கு மோடி, அமித்ஷாவை பார்த்தால் பயம். சசிகலாவை பார்த்தாலும் பயம். பயத்தால்தான் அவர் பாஜக.வினரை விமர்சனம் செய்யவில்லை. இந்த தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள்.!


இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.


19 views0 comments
bottom of page