துணை முதல்வர் ! தி.மு.க வுக்குள்ள சுதந்திரம் ! இப்போது கருத்து கூற ஒன்றுமில்லை ! தொல்.திருமாவளவன் பேட்டி !
- உறியடி செய்திகள்
- Sep 19, 2024
- 1 min read

தோகமலை.
ச.. ராஜா மரியதிரவியம் .....
தமிழக துணை முதல்வர் குறித்து இப்போது கருத்துக்கூற ஒன்றுமில்லை ! அது தி.மு.க.வுக்குள்ள சுதந்திரம். ! திருமா கருத்து.!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அறிவாலயத்தில் துணை முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவது தொடர்பாக கேட்ட போது
"அது ஆளுங்கட்சி எடுக்கக் கூடிய முடிவு. யாரைத் துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு. முடிவெடுத்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும். அதற்கு முன்பு கருத்து கூற முடியாது. கூட்டம் முடிந்து அறிவித்த பிறகு கருத்து சொல்லப்படும்." என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம் துணை முதல்வருக்கான தேவை இருக்கா? இல்லையா என்பதும், "துணை முதல்வருக்கான தேவை அவர்களுக்கு (தி.மு.க-விற்கு) உண்டான சுதந்திரம் அது. இதில் கருத்து கூற முடியாது. ஆளுங்கட்சிக்கான சுதந்திரம். அவர்கள் சுதந்திரமாக சுயமாக கட்சி முடிவு எடுக்கின்ற விஷயம். அந்தக் கட்சியினுடைய முன்னணித் தலைவர்கள் பேசிவிட்டு முடிவெடுக்கட்டும். அதன் பிறகு பார்ப்போம். !

தேசிய கல்வி கொள்கை வேறு. தேசிய மது விலக்கு கொள்கை வேறு. தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் கருத்து முரண்பாடு கொண்டுள்ளன. தயக்கமும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை, அப்படியே கல்வி கொள்கை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதுகிறோம். அதனால் எதிர்க்கிறோம்.!
தேசிய மதுவிலக்கு கொள்கை என்பது தேசிய அளவிலான மனிதர் குலத்தை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் குஜராத், பீகார், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தவிர எல்லா மாநிலங்களையும் அரசு மதுபான வியாபாரங்களை செய்வதால் தேசத்திற்கான மனித வளம் பாலாகிறது. அதனால் அரசியல் அமைப்பு சட்டம் 47-ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்கப்பட வேண்டும். அதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். !
இவ்வாறு அவர் கூறினார்.
Comments